/* */

திருப்பூரில் புற்றுநோய் சிகிச்சை அரசு மருத்துவமனை; ரூ. 60 கோடி செலவில் அமைக்க முடிவு

திருப்பூரில், ரூ. 60 கோடி செலவில், அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருப்பூரில் புற்றுநோய் சிகிச்சை அரசு மருத்துவமனை; ரூ. 60 கோடி செலவில் அமைக்க முடிவு
X

திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், ரூ. 60 கோடி செலவில், அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைக்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தமிழக அரசின் 'நமக்கு நாமே திட்டம்' கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.60 கோடி மதிப்பில், புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைப்பது குறித்து ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், தன்னார்வலர்கள், தொழில் அமைப்பினருடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

திருப்பூர் கலெக்டர் அலுவலக அரங்கில் நடந்த கூட்டத்துக்கு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தலைமை வகித்தனர். கலெக்டர் வினீத், மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.

புற்றுநோய் மருத்துவமனையில் பெட் ஸ்கேன் கருவி ரூ.5 கோடி மதிப்பிலும், 38 படுக்கை வசதியுடன் இரண்டு அறைகள், 2 அறுவை சிகிச்சை அரங்கம், புற்றுநோயியல் அரங்கம், கேத் ஆய்வகம், ஆய்வக கருவிகள், 9 மினி ஆய்வக அறைகள், 16 மருத்துவ அறைகள், ஒரு லினியர் ஆக்ஸிலரேட்டர் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் மிகவும் அதிநவீன கருவிகளுடன் இந்த புற்றுநோய் மருத்துவமனை அமைய உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நோயறியதல், சிகிச்சைக்கு பயனுள்ளதாக இந்த மருத்துவமனை இருக்கும்.' நமக்கு நாமே திட்டத்தின்' கீழ், திருப்பூர் மாநகராட்சி இணைந்து 67 சதவீத பங்களிப்பு நிதியாகவும், தன்னார்வலர்கள், அமைப்பினர், பொதுமக்கள் பங்களிப்புடன் 33 சதவீதமும் திரட்டி ரூ.60 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக மருத்துவ உபகரணங்களை வாங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நமது தொகையை செலுத்தி அரசின் பங்குத்தொகையையும் செலுத்தி, உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை கருவிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் மொத்த தொகையையும் செலுத்தி மருத்துவ உபகரணங்களை வாங்க வேண்டும். பொதுமக்களின் பங்களிப்பாக இதுவரை ரூ.4.5 கோடி நிதி வந்துள்ளது. மீதமுள்ள நிதியை திரட்ட அனைத்து தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் தங்களால் முடிந்த அளவு நிதியை வழங்க வேண்டும், என்றார்.

திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேசும்போது, 'புற்றுநோய் மருத்துவமனை கட்டிடம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்க வேண்டும். அவற்றை பெற்று, முதல்கட்டமாக கட்டிட பணிகளை தொடங்கி விட்டால் தன்னார்வலர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு தொடர்ந்து நிதி அளிப்பார்கள். அதனால் கட்டிட பணியை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என்றார்.

கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் ரூ.10 லட்சம், மேற்கு ரோட்டரி கிளப் சார்பில் ரூ.5 லட்சம் தொகைகளுக்கான காசோலைகளை வழங்கினர். அனைத்து ரோட்டரி கிளப் சார்பில், ரூ.10 கோடி வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்தனர்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாமில் கோரிக்கை மனுக்களை பெற்று அதில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை, அமைச்சர்கள் வழங்கினர்.

Updated On: 23 Oct 2022 8:04 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?