/* */

குண்டடம் வாரச்சந்தையில், ரூ. 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

Tirupur News,Tirupur News Today- பக்ரீத் பண்டிகை நெருங்கும் நிலையில், குண்டடம் வாரச்சந்தையில் நேற்று ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

HIGHLIGHTS

குண்டடம் வாரச்சந்தையில், ரூ. 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை
X

Tirupur News,Tirupur News Today- குண்டடம் வாரச்சந்தையில், கொம்புள்ள ஆடுகளுக்கு அதிக கிராக்கி காணப்பட்டது.

Tirupur News,Tirupur News Today- வருகிற 29ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குண்டடம் வாரச்சந்தையில் நேற்று ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டடம் வாரச்சந்தை வாரந்தோறும் சனிக்கிழமையன்று கூடுகிறது. குண்டடம் வாரச்சந்தைக்கு குண்டடம், ஊதியூர், கொடுவாய், மேட்டுக்கடை, சூரியநல்லூர், பூளவாடி, பெல்லம்பட்டி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து உள்ளூர் வியாபாரிகள், செம்மறி கிடாய்கள் மற்றும் வெள்ளாடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

இங்கு ஆடுகளை வாங்குவதற்காக மேச்சேரி, கேரளா, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏராளமானோர் வருகின்றனர். இவர்கள் இங்கு ஆடுகளை வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காகவும், இறைச்சிக்கும் கொண்டு செல்கின்றனர். வாரந்தோறும் குண்டடம் சந்தைக்கு 1,500 ஆடுகள் முதல் 2ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. விற்பனைக்கு வரும் அனைத்து ஆடுகளும் காலை 8 மணிக்குள் விற்றுவிடும். ஆனால் கடந்த 2 வாரங்களாக, ஆடுகளின் வரத்து அதிகரித்திருந்ததால் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

இதுகுறித்து, பெரியப்பட்டியை சேர்ந்த வியாபாரிகள் சிலர் கூறியதாவது,

பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் இந்தவாரம் அதிகளவில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனைக்காக செம்மறிக்கிடாய்கள் கொண்டு வந்ததால் விலை கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.நல்ல கொம்புடன் கூடிய 30 கிலோ எடை உள்ள செம்மறிக்கிடாய் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. கொம்பு இல்லாத செம்மறிக்கிடாய்கள் ரூ.17 ஆயிரம் வரை விற்பனையானது.நேற்று சந்தையில் மொத்தம் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. பொதுவாக பக்ரீத் பண்டிகை என்றாலே முஸ்லிம்கள் குண்டடம், கன்னிவாடி, மண்மேடு உள்ளிட்ட ஆட்டு சந்தைகளுக்கு நேரடியாக சென்று கிடாய்களை நல்ல விலைகொடுத்து வாங்கிச்செல்வது வழக்கம்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வாங்கி விற்கும் வியாபாரிகள் சந்தைகளுக்கு சென்று கிடாய்களை குறைந்த விலைக்கு வாங்கி கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, பல்லடம் போன்ற ஊர்களில் உள்ள முஸ்லிம்கள் வசிக்கும் தெருக்களில் கிடாய்களை கொண்டு சென்று விற்று நல்ல லாபம் சம்பாதிக்கின்றனர். முஸ்லிம்கள் வசிக்கும் இடம் அருகேயே விற்பதால் அவர்களும் நல்ல விலைகொடுத்து வாங்கிச்செல்கின்றனர். இதனால் முஸ்லிம்கள் பெருமளவில் சந்தைக்கு வராததால் வாங்கி விற்கும் வியாபாரிகள் மிக குறைந்த விலை கேட்டு வாங்கி செல்கின்றனர். வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Updated On: 25 Jun 2023 8:10 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  7. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  8. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்