/* */

தீத்தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்; கலெக்டர் ஆலோசனை

Tirupur News- திருப்பூா் மாவட்ட தீத்தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

HIGHLIGHTS

தீத்தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்; கலெக்டர் ஆலோசனை
X

Tirupur News- தீத்தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் தீத்தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு குறித்த குழுக் கூட்டம், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடந்தது.

தீபாவளி பண்டிகை காலம் நெருங்கிக்கொண்டு வரும் நிலையில், சில இடங்களில் பட்டாசு ஆலைகள், பட்டாசு கடைகளில் தீ விபத்துகள் நடந்துள்ளன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் தீத்தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீத்தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

இக்கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்து பேசியதாவது,

திருப்பூா் மாவட்டத்தில் வெடிபொருள் கிடங்குகள், பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு கடைகள் ஆகியவற்றில் பாதுகாப்பான முறையில் வெடிபொருள்கள் மற்றும் பட்டாசுகள் வைத்து கையாள்வதை உறுதிபடுத்த வேண்டும். பட்டாசு கடைகள் வைக்கப்பட்டால், அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். அதை ஆய்வு செய்யும் அதிகாரிகள் முழுமையாக கண்காணிக்க வேண்டும்.

இதுதொடா்பாக அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பாதுகாப்பான முறையில் வெடிபொருள்களை கையாள்வது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து தொடா்ந்து கண்காணிப்பு பணிகளை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும், என்றாா்.

இகூட்டத்தில், மாவட்ட போலீஸ் எஸ்.பி சாமிநாதன், கலெக்டரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராஜ், இணை இயக்குநா் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) சரவணன், புகழேந்தி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலா் அப்பாஸ், துணை இயக்குநா்கள் ஜெயமுருகன், சுதாகா், வெடிபொருள் கிடங்குகள், பட்டாசு தொழிற்சாலை உரிமையாளா்கள் பலா் பங்கேற்றனா்.

Updated On: 13 Oct 2023 6:16 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...