/* */

வரும் 29ல் உலக புலிகள் தின விழா; மாணவ மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியப்போட்டி

Tirupur News,Tirupur News Today- உலக புலிகள் தின விழாவை முன்னிட்டு, நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் மாணவ-மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

வரும் 29ல் உலக புலிகள் தின விழா; மாணவ மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியப்போட்டி
X

Tirupur News,Tirupur News Today- உலக புலிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்ற மாணவ, மாணவியர்.

Tirupur News,Tirupur News Today- உலக புலிகள் தினவிழா ஆண்டு தோறும் ஜூலை மாதம் 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உலக புலிகள் தின விழா சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் புலிகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தெரிவிக்கும் வகையில், போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்தப் போட்டிகள் உடுமலை பழனி சாலையில் உள்ள ராஜலட்சுமி கெங்குசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

இந்த மையங்களில் நடத்தப்பட்ட போட்டிகளில், எல்.கே.ஜி. முதல் கல்லூரி வரையிலான மாணவ - மாணவிகள் 1,245 பேர் கலந்து கொண்டனர். இந்த மையங்களில், ஓவியப் போட்டி காலை 10 மணி முதல் 12 மணி வரையில் புலி, வனநிலப்பரப்பில் புலிகள், புலி மற்றும் அதன் இரைவிலங்குகள், புலிகள் அழிவிற்கான காரணிகள் மற்றும் அச்சுறுத்தல்கள், புலிகள் வாழ்கின்ற பகுதியின் சூழ்நிலை என்ற தலைப்புகளில் போட்டி நடந்தது.

இதையடுத்து கட்டுரைப் போட்டி மதியம் 12.15 மணி முதல் 1.30 மணி வரை நடந்தது. இந்த போட்டியானது புலிகள் ஏன் தேசிய விலங்கு குறிப்பிடப்படுகிறது? வன நிலப்பரப்பில் புள்ளிகளின் முக்கியத்துவம் மற்றும் அதன் பாதுகாப்பு என்ற தலைப்புகளிலும் நடந்தது.

போட்டிகளை ஆனைமலை பகுதியில் காப்பக உதவி வன பாதுகாவலர் கணேஷ் ராம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் மாணவ மாணவிகள் உள்பட அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி வருகிற 29-ம் தேதி ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் உடுமலை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

போட்டிக்கான ஏற்பாடுகளை வனச்சரக அலுவலர்கள் சிவக்குமார் (உடுமலை), தனபாலன் (காங்கயம்), சுரேஷ் கிருஷ்ணன் (திருப்பூர்), உயிரியிலாளர் மகேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 27 July 2023 6:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...