/* */

ஊதிய பேச்சு வார்த்தை எப்போது? போக்குவரத்து ஊழியர்கள் எதிர்பார்ப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு.,) சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன், உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

HIGHLIGHTS

ஊதிய பேச்சு வார்த்தை எப்போது? போக்குவரத்து ஊழியர்கள் எதிர்பார்ப்பு
X

தாராபுரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதத்தில்  ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு.,) சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன், உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சங்கத்தின் திருப்பூர் மண்டல உதவி தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். சிபிஎம் தாலுக்கா செயலாளர் என்.கனகராஜ், உண்ணா விரதத்தை துவக்கி வைத்தார். அரசு போக்குவரத்து ஊழியர் சங்க திருப்பூர் மண்டல பொருளாளர் விஸ்வநாதன் பேசினார்.

இதில், வலியுறுத்தப்பட்ட கருத்துக்கள்:

போக்குவரத்து கழகங்களின் பற்றாக்குறையை ஈடுகட்ட வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை, அரசே ஏற்க வேண்டும். அதற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். ஊதிய பேச்சு வார்த்தையை உடனே துவக்க வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு பண பலன், அகவிலைப்படி உயர்வு. மருத்துவக்காப்பீடு ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடவேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. சங்கத்தின் கிளை தலைவர் அப்துல் ஜப்பார், உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

Updated On: 23 Nov 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி