/* */

விழிப்புடன் இருங்க…மாணவிகளுக்கு 'அட்வைஸ்'

போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் இணைந்து, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

HIGHLIGHTS

விழிப்புடன் இருங்க…மாணவிகளுக்கு அட்வைஸ்
X

தாராபுரத்தில் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில், பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் இணைந்து, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தினர். இந்நிகழ்ச்சியில், மாணவ, மாணவியருக்கு போக்குவரத்து தொடர்பான விதிமுறைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது போக்குவரத்து ஆய்வாளர் ஞானவேல் பேசினார். '18 வயதுக்கு குறைவான மாணவிகள் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஒட்டக்கூடாது. நண்பர்களுடன் வெளியே செல்லும் போது வாகனத்தை ஓட்டிச் செல்பவர்கள், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அறிமுகமில்லாத நண்பர்கள், உறவினர்கள் தவறாக நடக்க முயற்சிப்பதாக தெரிந்தால், உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். அல்லது அருகில் உள்ள பெண் போலீஸ் மற்றும் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்.

பள்ளியை விட்டு வீட்டுக்குச் செல்லும் போது முன்பின் தெரியாத நபர்களிடம் பேசக்கூடாது; அவர்கள் வாகனத்தில் பயணிக்கக் கூடாது. தொலைபேசி எண்களை பரிமாறக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.


Updated On: 24 Nov 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...