Begin typing your search above and press return to search.
தாராபுரம் பகுதியில் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
தாராபுரம் பகுதியில் பெய்த மிதமான மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
HIGHLIGHTS
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டாரத்தில், கடந்த சில நாட்களாக வெயின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. கடும் புழுக்கம் நிலவியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் இன்று காலை முதலேயே தாராபுரம் பகுதில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதன் பின்னர், திடீரென கருமேகங்கள் சூழ, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. மழையின் காரணமாக சீதோஷன நிலை மாறி குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது.
பொதுமுடக்கம் காரணமாக வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மக்களுக்கு இந்த குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், நீண்ட நாட்களாக வறட்சியின் பிடியால் சிக்கி, தீவினமின்றி பாதிக்கப்பட்டு கால்நடை வளர்ப்போர், சாரல் மழையால் வயல்களில் தீவனம் கிடைக்கும் என எதிர்பார்ப்போடு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.