/* */

கூடுதல் மகசூலுக்கு திரவ உயிர் உரம்: தாராபுரம் விவசாயிகளுக்கு அட்வைஸ்

மண் வளம் காக்கும், திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்த வேண்டும்’ என, தாராபுரம் பகுதி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

கூடுதல் மகசூலுக்கு திரவ உயிர் உரம்: தாராபுரம் விவசாயிகளுக்கு அட்வைஸ்
X

ரசாயன உர பயன்பாடால் மண் வளம் பாதிக்கப்படுகிறது என, விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இதை தவிர்க்க, திரவ உயிர் உர பயன்பாட்டை வேளாண்மை துறையினர் ஊக்குவித்து வருகின்றனர். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், அவினாசியில் உயிர் உர உற்பத்தி மையம் செயல்படுகிறது. இங்கு, ஆண்டுக்கு, 50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, உற்பத்தி நடந்து வருகிறது.

வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது; ரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத திரவ உயிர் உரங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். அவை, 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இவ்வகை உரங்களை பயன்படுத்துவதன் மூலம், உரங்களின் செலவு குறைவதோடு, மண் வளம் பாதுகாக்கப்படும். 10 முதல், -25 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கிறது. நீடித்த நிலையான வேளாண்மைக்கு வழி வகுக்கும் என்று கூறினார்.

Updated On: 14 Jan 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  3. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  4. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  5. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  8. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  9. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை
  10. வீடியோ
    Congress vs BJP இரண்டு கட்சிக்கும் வித்தியாசம் என்ன ?#annamalai...