/* */

தாராபுரத்தில் வாகனச்சோதனையில் ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் - ஹவாலா பணமா என விசாரணை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வாகனச்சோதனையில் 40 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

தாராபுரத்தில் வாகனச்சோதனையில் ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் - ஹவாலா பணமா என விசாரணை
X

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, பொள்ளாச்சி ரோட்டில் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்தவழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், லாரியில் இருந்த ஒரு பண்டலில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.

அந்த பணம் குறித்து டிரைவரிடம் போலீசார் விசாரித்தனர். அந்த பணத்தை பறிமுதல் எண்ணியபோது ரூ.39 லட்சத்து 75ஆயிரம் இருந்தது. பணம் குறித்து லாரி டிரைவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ராகவன் ( 56) என்பவரை அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் கரூர் மாவட்டம் புலியூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு சென்றதாகவும், நண்பர் ஒருவர் தன்னிடம் ரூ.39 லட்சத்து 75ஆயிரம் பணத்தை வழங்கி,கோழிக்கோட்டில் உள்ள உறவினர் ஒருவரிடம் கொடுத்து விட சொன்னதாக தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்டவை ஹவாலா பணமா என்பது குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயகுமார், கார்த்திக்கேயன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 Jun 2021 2:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  2. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  3. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  4. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  5. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  6. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  8. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
  9. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  10. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!