/* */

தாசபாளையத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை முகாம்

அன்னுார் தாசபாளையத்தில் நடந்த முகாமில் ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தாசபாளையத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை முகாம்
X

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், கஞ்சப்பள்ளி ஊராட்சி, தாசபாளையத்தில் முகாம் நடந்தது. ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்ட 1,200 கால்நடைகளுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. குடற்புழு நீக்கம், சினை ஊசி போடுதல், வெள்ளைக் கழிசல் நோய்க்கு தடுப்பூசி போடுதல், உன்னி மருந்து அளித்தல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

கால்நடை மருத்துவர் யசோதா பேசுகையில், "கால்நடைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பூசி போடவேண்டும். கால்நடை பராமரிக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சத்தான, தரமான, தீவனங்களை கால்நடைகளுக்கு வழங்க வேண்டும்" என்றார்.

முகாமில், சிறந்த மூன்று கிடாரிகளுக்கும், கால்நடை மேலாண்மை சிறப்பாக செய்த மூவருக்கும் ஊராட்சி தலைவர் சித்ரா பரிசு வழங்கினார். கால்நடை ஆய்வாளர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 12 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  3. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  4. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  6. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  7. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  8. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  9. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?
  10. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...