Begin typing your search above and press return to search.
அவினாசியில் முப்படை தளபதிக்கு அஞ்சலி
அவினாசியில் சமூக ஆர்வலர்கள் சார்பில், ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த, முப்படை தளபதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
HIGHLIGHTS
நீலகிரி மாவட்டம், குன்னுார் காட்டேரி அருகேயுள்ள நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட, 13 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். அவர்களுக்கு அவினாசியில் உள்ள தன்னார்வ அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் சார்பில், புதிய பஸ் நிறுத்தப்பகுதியில், அஞ்சலி செலுத்தப்பட்டது. பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி, அவர்களது உருவபடத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.