/* */

பணி வரன்முறை செய்யுங்க:அரசுக்கு ஆர்சிஎச் துப்புரவு ஊழியர்கள் கோரிக்கை

ஆர்.சி.எச். சுகாதார ஊழியர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும் என, அதன் மாநிலத் தலைவர் எல்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

மத்திய அரசின், தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்களில், துப்புரவு ஊழியர்கள், இரவு காவலர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதம், 1,500 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களே ஆர்.சி.எச். ஊழியர்கள் எனப்படுகின்றனர்.

இவர்களில், 3,140 பேருக்கு, குறைந்தபட்ச கூலி சட்டத்தின் அடிப்படையில், அந்த ஆட்சியர்கள் நிர்ணயம் செய்யும் தினக்கூலியை வழங்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் ஏற்கனவெ வழிகாட்டியது. இருப்பினும், அறிவிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படாததால், கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர், பலரும் வேலைக்கு செல்லாமல் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் அவ்வாறு வேலைக்கு செல்லாத ஊழியர்கள், அவர்களின் வாழ்வாதார சூழல் ஆகியவற்றை அறிந்துக் கொள்வதற்காக, தமிழ்நாடு அரசு சுகாதார நிலைய அனைத்து ஊழியர் சங்க மாநில தலைவர் எல்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் பி.வெங்டாச்சலம் மற்றும் நிர்வாகிகள், திருப்பூர் மாவட்டத்திற்கு வந்தனர். அவிநாசியில், சங்க உறுப்பினர்களுடன் இருவரும் ஆலோசனை நடத்தினார்.

அவர்கள் கூறுகையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே எங்கள் கோரிக்கையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். தேர்தலில் வெற்றி பெற்ற பின், பணி நிரந்தரம் செய்து தருவதாக உறுதியளித்தார்; ஆனால், கோரிக்கை நிறைவேறவில்லை; விரைவில் பணிவரன்முறை செய்ய வேண்டும் என்றார்.

Updated On: 26 Oct 2021 6:22 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்