/* */

அவிநாசியில் 'வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாம்: 542 பேர் பலன்

அவினாசியில் நடைபெற்ற, தமிழக அரசின் இலவச மருத்துவ முகாமில், 542 பேர் பலன் அடைந்தனர்.

HIGHLIGHTS

அவிநாசியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்: 542 பேர் பலன்
X

அவிநாசியில் நடந்த, அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமில், பொதுமக்களுக்கு மருத்துவப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழக அரசின், 'வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, பழங்கரை ஊராட்சி, அவிநாசிலிங்கம்பாளையத்தில், மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமை, பழங்கரை ஊராட்சி மன்ற தலைவர் கோமதி, துவக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்திவேல், பழங்கரை ஊராட்சி உறுப்பினர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் பொது மருத்துவம், இதய நோய் சிகிச்சை, சர்க்கரை நோய், பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகை நோய்களுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில், 304 ஆண்கள், 238 பெண்கள் உட்பட, மொத்தம் 542 பேர் பங்கேற்று பரிசோதனை மற்றும் ஆலோசனை பெற்றனர்.

Updated On: 22 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்