/* */

சேவூர் அருகே இலவச சட்ட உதவி முகாம்: பொதுமக்கள் பங்கேற்பு

அவினாசி வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில், சேவூர் அருகேயுள்ள சாவக்காட்டுபாளையத்தில் இலவச சட்ட உதவி முகாம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

சேவூர் அருகே இலவச சட்ட உதவி முகாம்: பொதுமக்கள் பங்கேற்பு
X

அவிநாசி அருகே இலவச சட்ட உதவி முகாம் நடந்தது.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின், வெள்ளிவிழாவை முன்னிட்டு, அவினாசி வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில், திருப்பூர் மாவட்டம், அவினாசி சேவூர் அருகேயுள்ள சாவக்காட்டுபாளையத்தில், இலவச சட்ட உதவி முகாம் நடத்தப்பட்டது.

தத்தனுார் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார், வரவேற்று பேசினார். அவினாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் விபிசி, தலைமை வகித்து, சட்ட உதவி முகாமின் பயன் குறித்து பேசினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி அப்சல் பாத்திமா, முன்னிலை வகித்தார். மூத்த வக்கீல் சுப்ரமணியம், வக்கீல் திருமூர்த்தி ஆகியோர் பேசினர். முகாமில், பொதுமக்களிடம் இருந்து, இலவச வீட்டுமனைப்பட்டா உட்பட பல்வேறு தேவைகள் சார்ந்த மனுக்கள் பெறப்பட்டன. நுாறுக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

Updated On: 10 Nov 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...