/* */

போலீஸ், நண்பர்கள் குழு அறக்கட்டளை சார்பில் வஞ்சிபாளையத்தில் சிசிடிவி!

திருமுருகன்பூண்டி காவல்துறை மற்றும் வஞ்சிபாளையம் நண்பர்கள் குழு அறக்கட்டளை சார்பில், வஞ்சிபாளையத்தில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

போலீஸ், நண்பர்கள் குழு அறக்கட்டளை சார்பில் வஞ்சிபாளையத்தில் சிசிடிவி!
X

கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்காக, வஞ்சிபாளையம் நால் ரோட்டில் நிறுவப்பட்டுள்ள கம்பம். 

குற்றச்செயல்களை தடுக்க, காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இச்செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிப்பதில் சிசிடிவி எனப்படும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் பேருதவி புரிகின்றன.

அவ்வகையில், வஞ்சிபாளையம் நண்பர்கள் குழு அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் திருமுருகன்பூண்டி காவல்நிலையம் ஒத்துழைப்புடன், வஞ்சிபாளையம் பகுதியில் மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெறுகின்றது.

அதன்படி,வஞ்சிபாளையம் அரசுப் பள்ளி எதிரே உள்ள நான்கு ரோட்டில், முதலாவது சிசிடிவி அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், தெக்கலூர் பிரிவு, கனியாம்பூண்டி பிரிவு உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது.

விருப்பம் உள்ளவர்கள், இப்பணிக்கு நிதி உதவி, பொருள் உதவி செய்து, வஞ்சிபாளையம், கனியாம்பூண்டி பகுதிகளின் பாதுகாப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி, அறக்கட்டளை நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 31 Jan 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!