/* */

அவினாசி அரசு கல்லூரி ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா

அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

அவினாசி அரசு கல்லூரி ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா
X

அவினாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. 

திருப்பூர் மாவட்டம் அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இன்று (ஏப்ரல் 30) கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. காலை 10.30 மணி அளவில் தொடங்கிய விழாவில், கல்லூரி முதல்வர் ஜோ. நளதம், கல்லூரி துவங்கிய நாள் முதல், இன்று வரை நடைபெற்ற அனைத்து சாதனைகளையும் செயல்பாடுகளையும் அறிக்கையாக சமர்ப்பித்தார்.ஆ

ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவியர்.

அதைத் தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் பிரசன்ன குமார், இக்கல்வி ஆண்டில் நடந்த விளையாட்டு போட்டிகள் பற்றியும், மாணவர்கள் பிற கல்லூரிகளில் படைத்த சாதனைகளையும் பட்டியலிட்டார். விழாவின் சிறப்பு விருந்தினரான, சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் பி.கே ஆறுமுகம், மாணவர்களுக்கு ஒழுக்கம் பற்றியும் யோகா பற்றியும் அறிவுரை வழங்கினார். மேலும் கழிப்பிட வசதி மற்றும் கணினி உபகரணங்கள் ஏற்பாடு செய்வதாக கூறினார்.


அதைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு, கல்லூரி முதல்வர் சான்றிதழ்களை வழங்கினார்.

Updated On: 30 April 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி