/* */

கோரோனாகேர் சென்டர் பணியாளர்களுக்கு ரோட்டரி சார்பில் ரூ.25 ஆயிரம் நல உதவி

கோரோனாகேர் சென்டர் பணியாளர்களுக்கு ரோட்டரி சார்பில் ரூ.25 ஆயிரம் நல உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

கோரோனாகேர் சென்டர் பணியாளர்களுக்கு  ரோட்டரி சார்பில் ரூ.25 ஆயிரம்  நல உதவி
X

திருப்பூர் வாஞ்சிபாளையம் ரோட்டரி சார்பில் கொரோனா  கேர் சென்டர் பணியாளர்களுக்கு ரூ.25ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.

திருப்பூர் வஞ்சிபாளையம் ரோட்டரி சங்கம் சார்பாக வஞ்சிபாளையம் பள்ளியில் கொரோனா கேர் சென்டர் செயல்படுகிறது.

இந்த சென்டரில் பணிபுரிந்து வரும் மருத்துவ உதவியாளர் மற்றும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரோட்டரி சார்பாக 25 ஆயிரம் ரூபாய் புதுப்பாளையம் பஞ்சாயத்து தலைவர் கே.பி. கஸ்தூரி பிரியாவிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் எஸ். சிவசாமி,செயலாளர் பி. வெங்கடாசலம், பொருளாளர் கே. ஈஸ்வரமூர்த்தி, துணைத்தலைவர் பி.பாலசுப்ரமணியம்,பிசெந்தில், என்.மோகனசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Jun 2021 10:36 AM GMT

Related News