/* */

அவினாசி அருகே ஆடு மேய்க்க சென்ற சிறுவன் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு

அவினாசி அருகே ஆடு மேய்க்க சென்ற சிறுவன் குட்டையில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

அவினாசி அருகே ஆடு மேய்க்க சென்ற சிறுவன் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு
X

குட்டையில் மூழ்கிய சிறுவனை மீட்கும் தீயணைப்பு வீரர்கள்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகேயுள்ள வெள்ளியம்பாளைம், கரைப்பாளையம் கிராமம் சிந்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கட்டட தொழிலாளி. அவரது மனைவி செல்வி. பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறார். இவர்களது மகன், மதன்குமார், 11, வயது. 5ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று, மாலை தனது நண்பர்களுடன் ஆடு மேய்க்க சென்று திரும்பி வரும்போது, அங்குள்ள தனியாருக்கு சொந்தமான குட்டைக்குள் இறங்கி சிறுவர்களுடன் விளையாடியுள்ளான். ஆழுமான பகுதிக்கு சென்ற மதன்குமார் எதிர்பாராவிதமாக சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினான்.

அவினாசி தீயணைப்பு நிலைய வீரர்கள், சம்பவ இடம் விரைந்து குட்டையில் இறங்கி சிறுவனை சடலமாக மீட்டனர். சிறுவனின் உடல் அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Updated On: 14 Jan 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு