/* */

பெண் உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Goondas Act in Tamil -கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட நான்கு பேர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

பெண் உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
X

கஞ்சா வழக்கு; நான்கு பேர், குண்டர் சட்டத்தில் கைது.

Goondas Act in Tamil -திருப்பூரை அடுத்த அவிநாசி பஸ் ஸ்டாண்ட் அருகில், கடந்த ஏப்ரல் 24-ம் தேதி சட்டவிரோதமாக கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக சென்ற போலீசார், அங்கு நின்ற 2 பேரை பிடித்து விசாரித்து, அவர்களிடம் இருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்களை விசாரித்த நிலையில், மேலும் ஒரு பெண்ணிடம் இருந்து 15 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். கஞ்சாவுடன் பிடிபட்ட நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த சாந்தி (வயது 54), அவரது தம்பி முருகேசன் (44), கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி வாகராயன்பாளையத்தை சேர்ந்த சரண் (22), சுரேஷ் (32) ஆகிய 4 பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் திருப்பூர் எஸ்.பி சசாங் சாய், இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்து, சிறையில் அடைக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் வினீத் உத்தரவுப்படி சாந்தி, முருகேசன், சரண், சுரேஷ் ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு, கோவை சிறையில் உள்ள 4 பேரிடமும் வழங்கப்பட்டது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Sep 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்