/* */

திருப்பூர்: அவிநாசியில் போலீசை தாக்கிய 4 பேர் கைது

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், ரோந்து பணியின் போது போலீசை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

திருப்பூர்: அவிநாசியில் போலீசை தாக்கிய 4 பேர் கைது
X

திருப்பூர் மாவட்டம், அவிநாசி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் சர்வேஸ்வரன், போலீஸ் திருவேங்கடம் ஆகியோர், தெக்கலூர் பகுதியில், வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, செங்காலிபாளையம் மூலக்காட்டு தோட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக, அவர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், அப்பகுதிக்கு சென்ற போலீசார், இது தொடர்பாக நடராஜ், சுதன், சட்டாம்பிள்ளை, லோகேஸ்வரன், முத்துசாமி ஆகியோரிடம் விசாரனை நடத்தினர். அப்போது திடீரென அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து போலீஸ் திருவேங்கடத்தை, அவர்கள் அடித்தனர்.

இதில், திருவேங்கடத்திற்கு காயம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜ், சுதன், சட்டாம்பிள்ளை, முத்துசாமி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 66, மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவானவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 7 Jun 2021 5:24 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!
  2. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  3. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  4. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  5. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?
  6. இந்தியா
    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்! கர்நாடக...
  7. உலகம்
    உலகின் சிறந்த பாதுகாப்பு : அசத்தியது இஸ்ரேல்...!
  8. தேனி
    சூட்சும சக்திகளும் நமது உடலும்..!
  9. தமிழ்நாடு
    தென் மாவட்டங்களுக்கு தேர்தல் கால சிறப்பு ரயில்கள்..!
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்