Begin typing your search above and press return to search.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் பொது மக்களுக்கு ஆயிரம் முககவசங்களை வழங்கினர்
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் பொது மக்களுக்கு ஆயிரம் முககவசங்களை மாற்றுத்திறனாளிகள் வழங்கினர்.
HIGHLIGHTS
உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் போலியோ மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய விழிப்புணர்வு நிகழ்வானது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் மது அருந்தாதீர்கள், நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடப்போம், உள்ளிட்ட வாசகங்கள் பொருத்திய பதாகைகளுடன் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டனர். இதனிடையே அவ்வழியே செல்லும் பொதுமக்களுக்கு மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஆயிரம் முகக் கவசங்களானது வழங்கப்பட்டது இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.