/* */

சசிகலாவின் வருகை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தும் -கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர்

சசிகலாவின் வருகை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதே எதார்த்தமான உண்மை என திருப்பூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் பேட்டி.

HIGHLIGHTS

சசிகலாவின் வருகை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தும்          -கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர்
X

கோவை செழியன் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் பொது மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இதனை துவக்கி வைப்பதற்காக வருகைதந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது,

"வேளாளர் சமூகத்தின் பெயரை வேறு பிரிவினருக்கு வழங்குவது குறித்து முதலமைச்சர் அவசரகதியில் முடிவெடுத்துள்ளார், இது தமிழகத்தில் சாதி கலவரத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலை ஏற்படுத்தும், மேலும் கிராமங்களில் மக்களை சந்திக்க முடியாதவாறு எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கின்ற செயலை அதிமுக அரசு செய்து வருகிறது. அச்செயலை அதிமுக கைவிட வேண்டும், பொங்கல் நேரத்தில் 2500 ரூபாய் என தேர்தலை மனதில் வைத்து திட்டத்தை அறிவித்து இருந்தாலும் அது அதிமுகவிற்கு கை கொடுக்காது. முதல்வர் வேட்பாளராக அதிமுக அறிவித்த நபரை ஏற்றுக் கொள்பவர்களோடு கூட்டணி என அதிமுக தெரிவித்திருக்க கூடிய சூழ்நிலையில், கூட்டணியில் உள்ள பாஜக அதனை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவர்கள் கூட்டணியில் இல்லை என்பதை அதிமுகவால் அறிவிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் சசிகலாவின் விடுதலை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பது எதார்த்தமான உண்மை எனவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு அரசு மருத்துவமனைக்கு ரத்த தானம் வழங்கினர் மேலும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Updated On: 28 Dec 2020 2:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி