/* */

வாணியம்பாடி அருகே கனமழையால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

வாணியம்பாடி அருகே நள்ளிரவில் பெய்த கனமழையில் சாலையோர மரம் வாகனம் மீது விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஆலங்காயம், நிம்மியம்பட்டு, வெள்ளக்குட்டை, உள்ளிட்ட இடங்களில் நேற்று நள்ளிரவு தொடங்கி விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால் ஆலங்காயத்திலிந்து காவலூர் செல்லும் சாலையில் சாலையோரம் உள்ள சுமார் 50 ஆண்டுகள் பழமையான மரம் விழுந்தது.

அப்போது, காவலூரிலிருந்து ஆலங்காயம் நோக்கி வந்த மினி லாரி மீது அந்த மரம் விழுந்ததில் வாகனம் சேதமடைந்தது. மேலும் உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்ததால், ஆலங்காயத்தில் இருந்து காவலூர் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து ஆலங்காயம் காவல்துறை மற்றும் வனத்துறையினர், மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மின் ஊழியர்கள் மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 22 Sep 2021 5:54 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்