/* */

வாணியம்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

வாணியம்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை உயிருடன் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
X

தீயணைப்புத்துறையினரால் மீட்கப்படும் பசுமாடு.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தெக்குபட்டு, மாந்தோப்பு பகுதியை சேர்ந்த விவசாயி விக்னேஷ் என்பவர் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நேற்று தனது பசு மாட்டை குளிப்பாட்டி கொண்டிருந்தபோது திடீரென மாடு வேகமாகச் சென்று அருகில் இருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.

பசு மாட்டை மீட்க விவசாயி விக்னேஷ் மற்றும் அருகிலிருந்தவர்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதிலும் மீட்க முடியாத நிலையில் வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் வாணியம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கயிறுகளை கட்டி பசுமாட்டை உயிருடன் மீட்டு விவசாயிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 15 Jan 2022 2:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!