/* */

வாணியம்பாடியில் காதலியை கத்தியால் குத்திவிட்டு காதலன் தற்கொலை

வாணியம்பாடியில் காதலித்து வந்த பெண்ணை சரமாரியாக  கத்தியால் குத்திவிட்டு காதலன் தூக்கிட்டு தற்கொலை

HIGHLIGHTS

வாணியம்பாடியில் காதலியை கத்தியால் குத்திவிட்டு  காதலன் தற்கொலை
X

வாணியம்பாடி அடுத்த மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் சசி என்கிற சரத்குமார் (வயது 25) இவர் ஓசூர் பகுதியில் தனியார் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார்.

இவர்அதே பகுதியை சேர்ந்த கோமதி (வயது 18) என்ற பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் திடீரென நேற்று இரவு கோமதியை பேச அழைத்த சசி திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோமதியை சரமாரியாக கழுத்துப்பகுதியில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கோமதியை அப்பகுதி மக்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கோமதியை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்

அப்போது கோமதியை குத்தி விட்டு தப்பி ஓடிய சசி என்கிற சரத்குமாரை போலீசார் தேடிவந்தனர். ஆனால் காதலித்த பெண் உயிரிழந்து இருப்பார் என்று எண்ணி சசி தூக்கில் தொங்கினார். உடனடியாக போலீசார் சசி உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 13 Jun 2021 1:24 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  2. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  3. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  6. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  7. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  8. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  9. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  10. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...