/* */

வாணியம்பாடி அருகே அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

வாணியம்பாடி அருகே அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர். விடுமுறையை கழிக்க குவியும் சுற்றுலா பயணிகள்

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
X

அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர். விடுமுறையை கழிக்க குவியும் சுற்றுலா பயணிகள்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் கடந்த ஒரு மாத காலமாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கௌண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக் காடுகள் உள்ளன, இந்த காடுகளில் கடந்த ஒரு மாத காலமாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு ஓடைகள், கானாறுகள், சிற்றருவிகளில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

குப்பம் தொகுதி, ராமகுப்பம் மண்டலம் தேவராஜபுரத்திற்கு தெற்கே "ஆந்திராவின் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி" என்னும் பொம்மகெடா நீர்வீழ்ச்சியில் புதியமாக உருவாகி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் சுமார் 40 அடி உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டுகிறது.

இந்த நீர்வீழ்ச்சியில் குளித்து ஆந்திரா , தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இளைஞர்கள் மட்டுமல்லாது பெண்களும், சிறுவர் சிறுமிகளும் இங்கு தண்ணீரில் குளித்து மகிழ்ந்து விளையாடி வருகின்றனர். விடுமுறை நாட்கள் மட்டும் அல்லாது வார நாட்களிலும் இங்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

Updated On: 21 July 2021 2:27 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்