/* */

வாணியம்பாடியில் அதிமுக, திமுகவினரிடையே வாக்குவாதம்

வாணியம்பாடியில் கொரோனா நிதியை வழங்க சென்ற அதிமுக எம்எல்ஏவை திமுகவினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்; பரபரப்பு

HIGHLIGHTS

வாணியம்பாடியில்  அதிமுக,  திமுகவினரிடையே வாக்குவாதம்
X

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி திம்மாம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிதியுதவி 2000 ரூபாயை வழங்குவதற்காக சென்ற வாணியம்பாடி சட்டமன்ற அதிமுக உறுப்பினர் செந்தில்குமாரை திமுகவினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திமுக நிர்வாகி உங்கள் ஆட்சியில் நீங்கள் வழங்கினீர்கள் இது எங்கள் ஆட்சி நாங்கள்தான் வழங்குவோம் என செந்தில்குமார் இடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அதிமுக தொண்டர் ஒருவர் இது ஸ்டாலின் பணம் அல்ல இது பொது மக்கள் வரிப்பணம் என்று சொன்னதால் ஒருவருக்கு ஒருவர் இடையே வாக்குவாதம் முற்றி சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது திமுகவினர் இடையே பேசிய சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், நான் மக்கள் பிரதிநிதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிதி உதவி வழங்க வந்துள்ளேன் என்று கூறினார்.

பின்னர் அதிகாரிகள் இரு கட்சி நிர்வாகிகளையும் சமாதானப்படுத்தி, பின்னர் கொரோனா நிதியை வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வழங்கினார்

Updated On: 16 May 2021 11:43 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!
  2. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  3. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  4. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  5. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?
  6. இந்தியா
    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்! கர்நாடக...
  7. உலகம்
    உலகின் சிறந்த பாதுகாப்பு : அசத்தியது இஸ்ரேல்...!
  8. தேனி
    சூட்சும சக்திகளும் நமது உடலும்..!
  9. தமிழ்நாடு
    தென் மாவட்டங்களுக்கு தேர்தல் கால சிறப்பு ரயில்கள்..!
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்