Begin typing your search above and press return to search.
ஆம்பூர் அருகே வீட்டில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பதுக்கிய இருவர் கைது
ஆம்பூர் அருகே வீட்டில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த இருவர் கைது. துப்பாக்கி போரிமுதல்.
HIGHLIGHTS
ஆம்பூர் அருகே வீட்டில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த இருவர் கைது. துப்பாக்கி போரிமுதல்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை பகுதியில் அனுமதியின்றி வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்து இருப்பது ரகசிய தகவல் தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது விஜய் என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பின்னர் தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வந்த நிலையில் வடச்சேரி பகுதியில் பதுங்கியிருந்த விஜய் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்த உமாராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு பின்னர் சிறையில் அடைத்தனர்.