/* */

திருப்பத்தூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் இன்று பொறுப்பேற்றார்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி இன்று பொறுப்பேற்று கொண்டார்

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் இன்று பொறுப்பேற்றார்
X

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி இன்று பொறுப்பேற்று கொண்டார்

வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டதால், திருப்பத்தூர் தனி மாவட்டமாக உதயமானது. திருப்பத்தூர் மாவட்டத்தின் முதல் காவல் கண்காணிப்பாளராக டாக்டர் விஜயகுமார் பொறுப்பேற்றுக் கொண்டு ஒன்றரை ஆண்டு பணி செய்து வந்தார்

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த விஜயகுமார் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு, சென்னையில் சிபிசிஐடி பிரிவில் பணியாற்றிவந்த சிபி சக்கரவர்த்தி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்தனர்

அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்தித்து பேசிய சிபி சக்கரவர்த்தி தற்போது கொரோனா தொற்றுள்ளதால் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Updated On: 10 Jun 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!