/* */

திருப்பத்தூரில் காலையிலேயே குடும்பத்துடன் வாக்களித்த கலெக்டர் அமர் குஷ்வாஹா

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. கலெக்டர் குடும்பத்துடன் வாக்களித்தார்

HIGHLIGHTS

தமிழ்நாட்டில் புதியதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கும், இதர மாவட்டங்களில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது. அதன்படி, இரண்டு கட்ட தேர்தலாக நடத்த தமிழ்நாடு அரசு முடிவுசெய்து முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெறுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இன்று திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, கந்திலி ஆகிய நான்கு ஒன்றியங்களுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

நான்கு ஒன்றியங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஒன்பது பதவிகளுக்கும், ஒன்றிய கவுன்சிலர் 83 பதவிகளுக்கும், ஊராட்சி மன்ற தலைவர் 137 பதவிகளுக்கும், 1188 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றுவருகிறது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உள்ளாட்சித் தேர்தலுக்கான தனது வாக்கினைச் செலுத்தினார். அதேபோல் பொதுமக்களும் உள்ளாட்சித் தேர்தலுக்கான தங்களது வாக்கினைச் செலுத்த காலை முதலே ஆர்வத்துடன் கலந்துவருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு ஊராட்சி ஒன்றியங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆறாயிரத்து 311 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரிகின்றனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆயிரத்து 700 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 6 Oct 2021 11:09 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  2. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  3. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  4. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  5. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  6. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  7. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  8. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  9. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்