/* */

ஆம்பூர் பகுதியில் வியாபாரிகள் போராட்டம்

ஆம்பூர் மார்க்கெட் பகுதியில் காய்கறி மற்றும் மளிகை  கடைகளை திறக்க அனுமதிக்க கோரி வியாபாரிகள் போராட்டம்

HIGHLIGHTS

ஆம்பூர் பகுதியில் வியாபாரிகள் போராட்டம்
X

ஆம்பூர் மார்க்கெட் பகுதியில் காய்கறி மற்றும் மளிகை  கடைகளை திறக்க அனுமதிக்க கோரி வியாபாரிகள் போராட்டம் 

கொரோனா நோய் தொற்றை குறைக்கும் நடவடிக்கையாக, ஆம்பூர் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் மார்க்கெட் பகுதியில் கடைகளை திறந்து வியாபாரம் செய்யவேண்டாம் என வருவாய்த்துறை அதிகாரிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வணிகர் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆம்பூரில் மட்டும் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் மார்க்கெட்டை திறக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கூறி இன்று காய்கறி மற்றும் மளிகை கடை வியாபாரிகள் பாங்கி மார்க்கெட் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

பின்னர் விரைந்து வந்த வருவாய்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உடனடியாக காய்கறி மற்றும் மளிகை கடை மார்க்கெட் திறந்து வியாபாரம் செய்ய அனுமதித்தனர்.

அப்போது காய்கறி வியாபாரிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சங்கங்களால் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது, இனி சங்கங்கள் வேண்டாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Updated On: 29 Jun 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!