/* */

ஆம்பூர் அருகே கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி விபத்து: 2 பேர் படுகாயம்

ஆம்பூர் அருகே முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி விபத்து. 2 பேர் படுகாயம் 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி விபத்து:  2 பேர் படுகாயம்
X

கன்டைனர் லாரி மீது மோதி உருக்குலைத்த வேன்

தர்மபுரியில் இருந்து திருத்தணி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக 15 பேர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் வந்து கொண்டிருந்த வேனை பெருமாள் என்பவர் ஓட்டி வந்தார் அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற கண்டெய்னர் லாரி மீது வேகமாக மோதியது. இதில் பயணம் செய்த மணிகண்டன், வெற்றிவேல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர் மேலும் 5 பேர் லேசான காயம் ஏற்பட்டது

இதனைத் தொடர்ந்து ஆம்பூர் கிராமிய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 24 July 2021 4:11 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?