/* */

காதலன் உயிரிழந்ததால் ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

ஆம்பூர் அருகே காதலன் உயிரிழந்ததால் ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தது தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறை விசாரணை

HIGHLIGHTS

காதலன் உயிரிழந்ததால் ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை
X

ஆம்பூர் தற்கொலை செய்து கொண்டவர்கள் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகள் 11ஆம் வகுப்பு மாணவி பிரியங்கா தேவி (வயது 16) இவர் இன்று காலை அதே பகுதியில் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிரியங்கா தேவி அதே பகுதியை சேர்ந்த எலெக்ட்ரிசியன் ரமணன் (வயது 21) என்பவரை ஒருவருடமாக காதலித்து வந்ததும், நேற்று செல்போனில் சண்டை போட்டு கொண்டதால் நேற்று இரவு ரமணன் அவரது வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், அதனால், மனமுடைந்த நிலையில் இன்று காலை பிரியங்கா தேவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

இதுகுறித்து காவல்துறையினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ரமணனின் சடலத்தை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கும் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த பிரியங்கா தேவி சடலத்தை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 20 Dec 2021 1:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி