Begin typing your search above and press return to search.
ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி 7ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு.
ஆம்பூர் அருகே மழையில் நனைந்து ஈரக்கையுடன் ஸ்விட்ச் போட்ட 7ஆம் வகுப்பு பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கிஉயிரிழப்பு
HIGHLIGHTS
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியர் கருணாகரன் இவரது மகன் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிஷ் (வயது 11) தனது வீட்டின் அருகே மழையில் விளையாடி கொண்டிருந்த விட்டு சிறுவன் ஹரிஷ் நனைந்தபடி வீட்டிற்குள் வந்து டிவி ஆன் செய்ய ஸ்விட்சை போட்டுள்ளார்.
அப்போது ஹரிஷ் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பின்னர் தகவல் அறிந்து விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்