/* */

ஆம்பூர் அருகே ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவன் தற்கொலை ரயில்வே போலீசார் விசாரணை

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன் உடலை கொட்டும் மழையில் உறவினர்களுடன் சேர்ந்து தூக்கி வந்த பெண்காவலர்

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவன் தற்கொலை ரயில்வே போலீசார் விசாரணை
X

மாணவன் உடலை கொட்டும் மழையில் உறவினர்களுடன் சேர்ந்து தூக்கி வந்த பெண் காவலர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் இவரது மகன் கோகுல் (வயது 19) தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இவர் இன்று அவரது கிராமத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு சென்று அமர்ந்து உள்ளார் திடீரென பெங்களூர் சென்னை மார்க்கத்தில் செல்லக்கூடிய ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதில் உடல் சிதைந்த நிலையில் இறந்த சடலத்தை பார்த்த அப்பகுதி மக்கள் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது திடீரென மழை வந்ததால் சடலத்தை அப்புறப்படுத்த தலைமை பெண் காவலர் உஷாராணி, சடலத்தை உறவினர்களுடன் சேர்ந்து ரயில்வே தண்டவாளத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் தூக்கிக்கொண்டு வந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக இளைஞர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் தோல்வியா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 16 July 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  2. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  4. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  5. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  6. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  7. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  8. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  9. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  10. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...