/* */

ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்: 5 பேர் கைது

ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். 6 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்: 5 பேர் கைது
X

மணல் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட 6 மாட்டு வண்டிகள்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு பகுதியில் உள்ள பாலாற்று மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் நரியம்பட்டு பாலாற்று பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த நபர்களை பிடிக்க முயன்றபோது 6 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த நபர்கள் மாட்டு வண்டிகளை விட்டு விட்டு தப்பியோட முயன்றனர்.

இதனையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்த காவல்துறையினர், மாட்டுவண்டிகளை ஓட்டி வந்த 5 பேரை துரத்திப் பிடித்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மணல் திருட்டில் ஈடுபட்ட நரியம்பட்டு பகுதியை சேர்ந்த மாயாசன் (எ)சிவலிங்கம், அன்பரசன் சின்னவரிகம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் வடிவேல் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 8 Jan 2022 4:33 PM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு