Begin typing your search above and press return to search.
ஆம்பூர் அருகே லாரி மோதி தூய்மை பணியாளர் உயிரிழப்பு
ஆம்பூர் அருகே பணியில் இருந்த போது தூய்மை பணியாளர் மீது லாரி மோதியதில், நிகழ்விடத்திலேயே பணியாளர் உயிரிழப்பு
HIGHLIGHTS
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே துத்திப்பட்டு பகுதியில் ஊராட்சி மன்ற தூய்மை பணியாளரான கமலா மற்றும் அவருடன் 3 பேர் ஊராட்சி முழுவதும் உள்ள குப்பைகளை சேகரித்து பாங்கி ஷாப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது அவ்வழியாக பெரியவரிகம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் இருந்து தோல் கழிவுகளை ஏற்றிகொண்டு ஆம்பூர் நோக்கி சென்ற லாரி திடீரென குப்பை வண்டி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த கமலா மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதில் நிகழ்விடத்திலேயே கமலா உயிரிழந்தார்.
உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்