/* */

ஆம்பூர் அருகே மணல் கடத்தல்

ஆம்பூர் அருகே ஆம்னி வேன், மாட்டுவண்டி மூலம் மணல் கடத்தல். மணல் மூட்டைகள் பறிமுதல், இருவர் கைது

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே மணல் கடத்தல்
X

ஆம்பூர் அருகே மணல் கடத்தல்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியிலுள்ள பாலாற்றில் இருந்து ஆம்னி வேன் மூலம் மணல் மூட்டைகளில் நிரப்பி வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் தலைமையில், போலீஸார் மாதனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி வேனை மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்ட போது அதில் மணல் மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆம்னி வேன் ஓட்டிவந்த உடைய ராஜபாளையம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை கைது செய்தனர்.

பின்னர் அங்கு மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்த மேலும் ஜெயக்குமார் என்பவரையும் கைது செய்து மணலுடன் மாட்டு வண்டி, ஆம்னி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து கிராமிய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 Jun 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  3. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  4. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  5. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  6. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  8. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்