/* */

ஆம்பூரில் ஊரடங்கை மீறி வியாபாரத்தில் ஈடுபட்ட கடைக்கு சீல்

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி மளிகைக் கடை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட கடைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

ஆம்பூரில் ஊரடங்கை மீறி வியாபாரத்தில் ஈடுபட்ட கடைக்கு சீல்
X

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி வியாபாரத்தில் ஈடுபட்ட கடைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகின்றன. அதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி மளிகை மொத்த வியாபார கடையில் நவீத் என்பவர் கடையைத் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து வருவாய் துறைக்கு புகார் வந்தன.

அதன் அடிப்படையில் அங்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் பாபு மற்றும் வருவாய்த்துறையினர் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.

தொடர்ந்து இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடக்கூடிய கடைகளை கண்டறிந்தால் உடனடியாக சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 29 May 2021 12:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  5. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  8. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு
  9. நாமக்கல்
    கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு 29ம் தேதி முன்பதிவு துவக்கம்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’