Begin typing your search above and press return to search.
ஆம்பூரில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு
ஆம்பூரில் காவல்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக அப்பகுதியில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் காவல்துறை சார்பில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கூட்டமாகச் செல்லக்கூடாது, தனித்திரு விழித்திரு விலகி இரு எனவும், வெளியில் சுற்ற கூடாது எனவும் அடிக்கடி கைகளில் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் போன்றவை குறித்து காவல்துறையினர் ஒவ்வொரு பகுதியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்