/* */

காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் 4 நாட்களுக்கு சடலமாக மீட்பு

ஆம்பூர் அருகே  தரைபாலத்தை கடக்க முயன்று காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

HIGHLIGHTS

காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்  4 நாட்களுக்கு சடலமாக மீட்பு
X

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நடராஜபுரம் பகுதியில் வசித்து வந்தவர் குபேந்திரன் இவர் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் முறுக்கு வியாபாரம் செய்து வந்துள்ளார்.

கடந்த 5 நாட்களாக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது அப்போது கடந்த 19ஆம் தேதி நடராஜபுரம் பாலத்தை கடக்க முயன்ற முறுக்கு வியாபாரி குபேந்திரன் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். உடனடியாக தீயணைப்பு துறையினர் காட்டாற்று வெள்ளத்தில் தேடி வந்தனர்,

இந்நிலையில், இன்று சிவராஜபுரம் காட்டாறு பகுதியில் தரைப்பாலத்தில் சடலம் ஒன்று இருப்பதாக காவல்துறையினருக்கு அப்பகுதி தகவல் கொடுத்தனர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுடன் வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் அப்போது தீயணைப்பு வீரர்கள் கயிற்றின் மூலம் அழுகிய நிலையில் இருந்த சடலத்தை போராடி மீட்டனர்.

பின்னர் அங்கு வந்த குபேந்திரன் உறவினர்கள் சடலத்தை பார்த்து உறுதி செய்த பின்னர் சடலத்தை காவல்துறையினர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Updated On: 23 Nov 2021 12:51 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...