/* */

ஆம்பூர் அருகே அண்ணனை காப்பாற்ற சென்ற தம்பி நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆம்பூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த அண்ணனை காப்பாற்ற சென்ற தம்பி நீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே அண்ணனை காப்பாற்ற சென்ற தம்பி நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

அண்ணனை காப்பாற்ற சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த உதயகுமார் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கசதோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் செல்வகுமார் (28), உதயகுமார் (26), சகோதரர்களான இருவரும், நேற்று மாலை அதே பகுதியில் உள்ள சாமண்ணா என்பவரது நிலத்தின் வழியாக சென்று கொண்டிருந்த போது, செல்வகுமார் அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார்

உடனடியாக அண்ணனை காப்பாற்ற உதயகுமார் கிணற்றில் குதித்துள்ளார், இந்நிலையில் செல்வகுமார் கிணற்றில் இருந்து மேலே வந்த நிலையில் உதயகுமார் மூச்சு திணறி நீரில் மூழ்கியுள்ளார்

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் உதயகுமாரை மீட்க போராடியுள்ளனர் ஆனால் இரவு நெடுநேரம் ஆனதால் போதிய வெளிச்சம் இல்லத்தாலும் மீட்பு பணியில் தோய்வு ஏற்பட்டது,

இந்நிலையில் இன்று காலை மீண்டும் தேடுதல் பணியில் ஈடுப்பட்ட தீயணைப்பு துறையினர் உதயகுமாரை சடலமாக மீட்டனர் இதனை தொடர்ந்து இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர் மேலும் உதயகுமாருக்கு திருமணம் ஆகி 9 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில் அவர் இறந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 2 Jan 2022 4:51 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!