/* */

குளத்தில் மூழ்கி இறந்த குழந்தைகள்: சோகத்தில் விஷம் குடித்து இறந்த தந்தை

ஆம்பூர் அருகே கோவில் குளத்தில் மூழ்கி இரு குழந்தைகள் தனது கண்முன்னே உயிரிழந்த துக்கம் தாங்காமல், தந்தையும் விஷம் குடித்து தற்கொலை

HIGHLIGHTS

குளத்தில் மூழ்கி இறந்த குழந்தைகள்: சோகத்தில் விஷம் குடித்து இறந்த தந்தை
X

குளத்தில் மூழ்கி இறந்த சிறுவர்கள்

ஊத்தங்கரையைச் சேர்ந்த லோகேஸ்வரன் - மீனாட்சி தம்பதியினரின் ஹரிப்பிரியா என்ற மகளும், யஸ்வந்த் என்று மகனும் நேற்று குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்ற தந்தை முயற்சி செய்தும் முடியவில்லை.

தனது பிள்ளைகள் தனது கண்முன்னே உயிரிழந்த துக்கம் தாங்காமல், கதறித் துடித்த லோகேஸ்வரன் - மீனாட்சி தம்பதியர் தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்ள முடிவு செய்தனர்.

குழந்தைகளின் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் இருந்து சற்று தொலைவில் உள்ள ரயில் நிலையத்திற்கு தனது மனைவி மீனாட்சியுடன் சென்ற லோகேஸ்வரன், குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து குடித்துள்ளார். பிறகு தனது மனைவி மீனாட்சிக்கும் கொடுத்தார். விஷம் கலந்த குளிர்பானத்தை மீனாட்சி குடிக்க முயன்ற போது கடைசி நேரத்தில் லோகேஸ்வரன் தட்டி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதை அடுத்து மீனாட்சி சத்தம் போடவே லோகேஸ்வரனை மீட்ட பயணிகள், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் ஆம்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 11 Sep 2021 8:17 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை சிஎஸ்ஐஆர் வளாகத்தில் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாள் விழா
  2. வேலைவாய்ப்பு
    ஆங்கிலம் இல்லாமல் அதிக சம்பளம் தரும் வேலைகள்
  3. வணிகம்
    50 பேர் சாப்பிடும் பெரிய ஆர்டர்..! இனி Zomato டெலிவரி செய்யும்..!
  4. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் இனி AI உதவியாளர்..! நன்மை, தீமைகள் என்ன?
  5. நாமக்கல்
    சாலையோர மரத்தில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 மாணவர்கள்...
  6. ஆன்மீகம்
    சிவம் என்றால் பரம்பொருள்..! அவன் புகழ் போற்றுவோம்..!
  7. ஈரோடு
    மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க தமிழகம் வருகிறார் மோடி: ஈரோட்டில்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு..!
  9. கோயம்புத்தூர்
    கோவையில் ஓட்டுக்குப் பணம் வாங்க மறுத்த பொதுமக்களுக்கு மிரட்டலா?
  10. ஆன்மீகம்
    ராசி என்பது என்ன..? அது எப்படி வாழ்க்கையில் பங்கெடுக்கிறது..?