Begin typing your search above and press return to search.
கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை பருவம் துவங்க கோரி விவசாயிகள் போராட்டம்
ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை பருவம் துவங்க கோரி கரும்பு விவசாயிகள் மற்றும் ஆலை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
HIGHLIGHTS
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை பருவம் துவங்க கோரி சுமார் 1 மாத காலமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஆலை பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக இன்று கரும்பு விவசாயிகள் அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்து உடனடியாக ஆலையை திறக்க கோரி நுழைவாயிலில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக அரசு 2021-2022 ஆம் ஆண்டு கரும்பு அரவை உடனடியாக துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ள கரும்பை வேறு ஆலைக்கு அனுப்பாமல் இந்த ஆலையிலேயே அரவை செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.