/* */

அதிமுக கள்ள நோட்டு, திமுக நல்ல நோட்டு: எம்பி கதிர் ஆனந்த் பேச்சு

அதிமுக ஒரு கள்ள நோட்டு திமுக தான் நல்ல நோட்டு. எனவே உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று எம்பி கதிர் ஆனந்த் பேச்சு

HIGHLIGHTS

அதிமுக கள்ள நோட்டு,  திமுக  நல்ல நோட்டு: எம்பி கதிர் ஆனந்த் பேச்சு
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வில்வநாதனை அறிமுகம் செய்யும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எம்பி கதிர் ஆனந்த், யார் வந்தாலும் திட்டங்கள் நிறைவேறும் திட்டங்களை யார் நிறைவேற்றி கொடுப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள். பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஆட்சியை தூக்கி எறிய வேண்டிய காலம் இது. எத்தனையோ திட்டங்களை ஸ்டாலின் அறிவிக்கிறார். அதிமுக அரசு செய்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நல்ல கலர் ஜெராக்ஸ் மிஷின் ஒன்று வாங்கி வைத்துள்ளார்கள். ஸ்டாலின் அவர்கள் சொன்னவுடன் பின்னாடி சென்று கலர் ஜெராக்ஸ் எடுத்து விடுகிறார்கள்.

அதிமுக திட்டத்திற்கும், திமுக திட்டத்திற்கும் என்ன வேறுபாடு என்று என்னை கேட்டார்கள். நான் ஒன்று தான் சொன்னேன், எங்களுடையது நல்ல நோட்டு அது கள்ள நோட்டு என்று சொன்னேன். கள்ள நோட்டு என்றைக்குமே செல்லுபடியாகாது நல்ல நோட்டு மட்டும்தான் செல்லுபடியாகும்

எத்தனை முறை 500 ரூபாய் 2000 ரூபாய் ஜெராக்ஸ் எடுத்து போட்டாலும், கள்ள நோட்டு கள்ள நோட்டு தான். நல்ல நோட்டு நல்ல நோட்டு தான் மக்களுக்கு பயன் அடைய வேண்டிய திட்டங்களைக் கொண்டு செல்லும் கட்சி என்றால் அது திமுக கூட்டணி தான்.

நான் அதிகமாக கடவுள் நம்பிக்கை உடையவன். நான் விழுந்து வணங்குவது என் பெற்றோர்களை மட்டும்தான். எனக்கு என்ன வேண்டுமானாலும் என் தாய் தந்தையர் காலில் விழுந்து நான் கேட்கிறேன். இங்கு இருக்கக்கூடிய சகோதரர்கள் சகோதரிகளே கழக தோழர்களே உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன். உன் பாதங்களை தொட்டு கேட்கிறேன். உங்கள் வாக்கை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பேசினார்

இதில் மாவட்ட பொறுப்பாளர் க.தேவராஜ் மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Updated On: 21 March 2021 11:05 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  5. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  6. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  7. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  8. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  10. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...