/* */

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏரிக்கு செல்லக்கூடிய வரத்து கால்வாய் உடைப்பு

ஆம்பூரில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விண்ணமங்கலம் ஏரிக்கு செல்லக்கூடிய வரத்து கால்வாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏரிக்கு செல்லக்கூடிய வரத்து கால்வாய் உடைப்பு
X

விண்ணமங்கலம் ஏரிக்கு செல்லக்கூடிய வரத்து கால்வாய் உடைப்பை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் 

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக தொடர்ச்சியாக மழை பெய்ந்து வரும்நிலையில் தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆம்பூர் பாலாற்றில் இருந்து விண்ணமங்கலம் ஏரிக்கு வரும் வரத்துக்கால்வாய் உடைப்பு ஏற்பட்டு இருப்பதாக இதனால் ஏரிக்கு செல்லக்கூடிய தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது என அப்பகுதி விவசாயிகள் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அமர் குஸ்வாஹாக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு அதனை சரி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

இதனைத்தொடர்ந்து அதனை சரிசெய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆய்வின்போது வருவாய் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் என அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்

Updated On: 10 July 2021 12:03 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!