/* */

ஆம்பூரில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து சேவை மீண்டும் இயக்கம்

ஆம்பூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து சேவையை எம்எல்ஏ வில்வநாதன் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

ஆம்பூரில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து சேவை மீண்டும் இயக்கம்
X

2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து சேவையை எம்எல்ஏ வில்வநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தமிழக ஆந்திர எல்லைப்பகுதியான சுட்டகுண்டா மலை கிராமத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சுட்ட குண்டா, அரங்கல்தூருகம், அபிகிரிபட்டறை, பொன்னப்பள்ளி, கதவாளம், பாசனபள்ளி, ஆகிய கிராம மக்கள் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் அவர்களிடம் மீண்டும் பேருந்து இயக்க மனு அளித்தனர்.

அதன் பேரில் உடனடியாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் பேருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதைதொடர்ந்து இன்று ஆம்பூரில் இருந்து சுட்டகுண்டா வரை செல்லக்கூடிய அரசு பேருந்து (ஜி21/ஏ) ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர் .

இன்று முதல் சென்று கொண்டிருந்த பேருந்து 2 முறை இந்த வழித்தடத்தில் செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சுமார் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் மகளிருக்கான பேருந்து கட்டணம் இல்லை என்பதால் தமிழக அரசுக்கும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் கிராமமக்கள் நன்றி தெரிவித்தனர்

Updated On: 30 Aug 2021 2:56 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா