/* */

ஆம்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது

ஆம்பூர் அருகே இனிப்பு வாங்க கடைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்

HIGHLIGHTS

ஆம்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது
X

ஆம்பூரில் போக்சோவில் கைது செய்யப்பட்ட ஜமில் அகமது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கடாம்பூர் சேர்ந்தவர் ஜமில் அகமது (வயது 22) இவர் ஆம்பூர் அருகே உள்ள ஒரு இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இறைச்சி கடைக்கு அருகில் 7 வயது சிறுமி மாலை நேரத்தில் தின்பண்டம் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்பொழுது கடையில் விடுவதாக கூறி சிறுமியை பைக்கில் அழைத்துச் சென்ற இளைஞர் தொடர்ந்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வீட்டுக்குச் சென்ற சிறுமி நடந்த சம்பவத்தை தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை உமராபாத் காவல்துறையில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஜமில் அகமது என்பவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Updated On: 24 July 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...