/* */

ஆம்பூர் அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் விவசாய கிணற்றில் இருந்து மீட்பு

ஆம்பூரில் அழுகிய நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் விவசாய கிணற்றில் இருந்து மீட்பு, கொலையா? தற்கொலையா?காவல்துறையினர் விசாரணை.

HIGHLIGHTS

ஆம்பூர் அருகே  35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் விவசாய கிணற்றில் இருந்து மீட்பு
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சி ரங்காபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் திடீரென துர்நாற்றம் வீசுவதாக நிலத்தில் வேலை செய்தவர்கள் வெங்கடேசன் இடம் தெரிவித்தனர். அதன்பேரில் கிணற்றில் சென்று பார்த்தபோது சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு வெங்கடேசன் ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

அதன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்க ஆம்பூர் தீயணைப்புத் துறையினரை வரவைத்து கிணற்றிலிருந்து சடலத்தை தீயணைப்புத்துறையினர் கயிறுகள் மூலம் கட்டி மேலே எடுத்து பார்த்தபோது அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் 35 வயதில் வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் என்பது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்பூர் அருகே அழுகிய நிலையில் கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 15 July 2021 3:02 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!