/* */

ஆம்பூரில் அனைத்து வணிகர் சங்கங்களுடன் கோட்டாட்சியர் ஆலோசனைக்கூட்டம்

ஆம்பூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வணிகர் சங்கங்களுடன் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி ஆலோசனைக்கூட்டம்

HIGHLIGHTS

ஆம்பூரில் அனைத்து வணிகர் சங்கங்களுடன் கோட்டாட்சியர் ஆலோசனைக்கூட்டம்
X

ஆம்பூரில் அனைத்து வணிகர் சங்கங்களுடன் கோட்டாட்சியர் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார் 

தமிழகத்தில் சிலர் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூன் 14ஆம் தேதி வரை நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இருந்தபோதிலும் ஆம்பூர் பஜார் பகுதிகளில் குறுகிய இடம் என்பதால் அங்கு மக்கள் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதற்கு அதிக அளவில் கூட்டம் சேர்வதால் பஜார் பகுதிகளில் கடைகளைத் திறக்கக் கூடாது என்று வருவாய்த் துறையினர் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக ஆம்பூர் பகுதிகளில் வணிகர் சங்கங்கள் உடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், டிஎஸ்பி சச்சிதானந்தம் மற்றும் வருவாய்த் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பஜார் பகுதிகளில் கடை திறக்க கூடாது எனவும், அதே நேரத்தில் காய்கறி அத்தியாவசிய பொருட்களை வாகனம் மூலம் வீட்டுக்கு கொண்டு விற்கவும் மேலும் மொத்த காய்கறி விற்பனையை தனியார் பள்ளி வளாகத்தில் அனுமதி வழங்கியும் முடிவெடுக்கப்பட்டது.

Updated On: 7 Jun 2021 9:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  2. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  3. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  4. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  5. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  6. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  7. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  8. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  9. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  10. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு